Tuesday, December 30, 2008

எங்க ஏரியா உள்ள வராதே! வொவ் வொவ்... - குரைக்கும் CPM சொறிநாய்!!

குலைக்கிற சொறிநாய் கடிக்காது உதை வாங்குற சொறிநாய் குலைக்காது - சொறிநாயை ஒழிப்போர் சங்கம்

தலைப்பில் உள்ள பாட்டு அனைவருக்கும் அறிமுகமானதே. 'புதுபேட்டை' படத்தில் ரவுடிகள் என்ற சொறிநாய்களுக்கான பாடலாக அது வரும். தற்போது CPM அடைந்துள்ள பரிணாம வளர்ச்சிக்கும் அந்த பாடல் பொருத்தமாக உள்ளது. சில நாட்கள் முன்பு CPM சொறிநாய்கள் பம்மி பதுங்கி ஓடிய சம்பவம் குறித்தே இந்த பதிவு.

ஏற்கனவே பல்லாவரத்தில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடிற்கு பிரச்சாரம் செய்யப் போன புஜதொமு தோழர்களிடம் வம்பு செய்து விழி பிதுங்கி போயுள்ளது CPM சொறிநாய். (கிளைக் கதை: பல்லாவரம் பிரச்சினையில் புஜதொமு கொடுத்துள்ள FIR பதிவு செய்யப்படும் நிலையில் உள்ளது. அது பதிவு செய்யப்பட்டால் ரவுடித்தனம் செய்த CPM சொறிநாய்களின் உத்தியோகத்துக்கு ஆப்பு ஆகிவிடும். இப்போது தங்களது நிரந்தர கூட்டணியில் உள்ள போலீசை வைத்து கெஞ்சியும், மிரட்டியும் வருகிறார்கள். போலீசுக்கும் ரவுடிக்கும் இருக்கும் கூட்டணியில் இது ஒரு வகை).

இந்நிலையில், ஆவடியில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடிற்கு பிரச்சாரம் செய்யப் போன இளம் தோழர்களிடம் இதே போல ரவுடித்தனம் செய்துள்ளனர் CPM சொறிநாய்கள். "வேற ஏரியாவுல இருந்து இங்க வந்து ஏண்டா பிரச்சாரம் செய்கிறீர்கள்" என்று வம்பு செய்துள்ளனர் CPM சொறிநாய்கள். எங்க ஏரியா உள்ள வராதே என்று புதுப்பேட்டை சொறிநாய்கள் ஸ்டைலில் கூவியவர்களிடம் இருந்து ஒதுங்கி வந்துள்ளனர் தோழர்கள். சிறிது நேரத்திற்கு பிறகு இந்த இளம் தோழர்கள் ஒரு மூத்த தோழர் துணையுடன் அங்கு மீண்டும் பிரச்சாரம் செய்ய சென்றுள்ளார்.

மீண்டும் வந்த CPM சொறிநாய்களிடம் மூத்த தோழர் நடத்திய உரையாடல் பின்வருமாறு போனது:

புஜதொமு தோழர்: ஏரியா விட்டு ஏரியா வந்துதாண்டா பிரச்சாரம் செய்வோம் உன்னால என்ன புடுங்க முடியுமோ, புடுங்கிக் கோடா.

CPM சொறிநாய்கள்: இல்ல தோழர், அது... நாங்க சும்மா விசாரிச்சோம் அவ்வளவுதான்....

மூத்த தோழர் குறித்து அறிந்திருந்த CPM சொறிநாய்கள், இப்படியாக பம்மி, பதுங்கி, குலைந்து, தமது வாலை ஆட்ட வழியின்றி பின்னால் சொருகிக் கொண்டு ஓடியுள்ளனர். அதிமுக, திமுக, பாமக கட்சிகளிடம் இருக்கும் நாகரிகம் கூட CPM இடம் இல்லை என்பதும். இந்தியாவிலேயே ஆகக் கேவலமாக சீரழிந்த கட்சியாக, சொறிநாய்களின் தலைமை சக்தியாக CPM இருப்பதும் கடந்த சில வருடங்களில் தொடர்ந்து சந்தி சிரித்து வருகிறது. அதில் இதுவும் ஒன்று. ஏரியா பிரித்து ரவுடியிசம் செய்யும் கட்சியாக அது வளர்ந்துள்ளது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை குறுக்கு வழியில் அடைவோம் என்று சொன்னவர்கள் இப்போது சொறிநாய்களின் மொள்ளமாறித்தனத்தையே அடைந்துள்ளனர்.

கலகம் என்ற தோழரின் கவுஜ(சில மாற்றங்களுடன்):

சிவப்பு சாயம்
வெளுத்து போச்சு டிங் டிங் டிங்

பன்னி வேசம்
கலஞ்சு போச்சு டிங்டிங்டிங்

தீக்கதிரும்
குப்பையாச்சு டிங்டிங்டிங்

போலி விடுதலைக்கு
பைத்தியம் முத்தி டிங்டிங்டிங்

CPM சொறிநாயின்னு தெரிஞ்சு
போச்சி வொவ் வொவ் வொவ்...

சூரியன்

கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !
காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்: தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்!
போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !
அடிவாங்கினால் பொன்னாடை! இந்து முன்னணி vs த.மு.எ.ச Exclusive!!
அமர்நாத் - சோம்நாத்
ஜனநாயகம் என்பது RSS போன்ற இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு மட்டுமே உரியது - கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !!!
சி.பி.எம். அம்பிகளின் தீக்கதிரும், பத்திரிக்கா தர்...
”கழிசடையைவிட கூவம் எவ்வளவோ மேல்”, “சிபிஎம் கட்சியை...

Friday, December 19, 2008

தமிழர்களின் உரிமைகளை மதித்த கர்நாடக அமைச்சர் நஞ்சே கவுடா மரணமடைந்து விட்டார்!

கேனாக்கல் பிரச்சினையை ஆரம்பித்து வைத்து அதன் மூலம் கன்னட இனவெறி கிளப்பி அரசியல் ஆதாயம் தேடி கொண்டான் RSS கும்பலின் தேர்தல் கட்சியான பாஜகவின் எடியூரப்பா என்ற வக்கிர கோமாளி. இந்த சமயத்தில் ஒகேனாக்கலில் தமிழகத்தின் உரிமையை துணிச்சலாக அங்கீகரித்து பேசியவர்தான் இந்த நஞ்சே கௌடா. அந்த சமயத்தில் வெகு தெளிவாக தமிழகத்தின் உரிமைகளை குறிப்பிட்டதுடன், ஒகேனாக்கல் குடிநீர் திட்டத்தை கர்நாடகா தடுப்பதற்கு எந்த உரிமையும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த கருத்திற்க்கு மரியாதை செலுத்தும் முகமாக அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

சூரியன்

Tuesday, December 16, 2008

நேற்று அண்டார்டிகாவில் பயங்கரவாதிகள் நடத்திய அதி பயங்கர தாக்குதல்!!

அண்டார்டிகா, அலாஸ்கா, கிரீன்லாந்து பகுதிகளில் பயங்கரவாதிகள் இதுவரை நடத்திய அதி பயங்கர தாக்குதல்கள் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. ஆளே இல்லாத நாட்டுல யாருக்குடா குண்டு வைக்கிறாய்ங்க என்று வியக்கும் நல்லுள்ளம் கொண்டோர்களுக்கான விளக்கம் வருமாறு.

நாசா என்கிற அமெரிக்க ஆய்வு கூடம் நடத்திய ஆய்வில் இதுவரை அண்டார்டிக, அலாஸ்கா, கிரீன்லாந்து பகுதிகளில் 2003லிருந்து 2 டிரில்லியன் டன் ஐஸ் கட்டி உருகி விட்டதாக தெரிய வந்துள்ளது. இதனை குலோபல் வார்மிங் என்று சொல்கிறார்கள். நமக்கென்னவோ குலோபல் வார்னிங் என்றே காதில் விழுகிறது. 2 டிரில்லியன் டன் என்பது 2 லட்சம் கோடியே ஆயிரம் கிலோ பனிக்கட்டி உருகியுள்ளது. இப்படி நடைபெறும் பணிக்கட்டி உருகல் குறித்து பல வருடங்களாகவே மிக கடுமையான எச்சரிக்கைகளை ஆய்வாளர்கள் அறிவித்து வந்துள்ளனர். இது குறித்து முன்னாள் அமெரிக்க குடியரசு பதவி போட்டியாளர் அல் கோர் எடுத்த ஆவணப் படமான 'குலோபல் வார்மிங் - தி இன்கண்வீனியண்ட் ட்ரூத்' பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. (The Hindu - Dec 17 2008 - Newscape - 2 Trillion tonnes of ice have melted since 2003: NASA) (Ice melting across globe at accelerating rate, NASA says - CNN)

குலோபல் வார்மிங் பிரச்சினையால்தான் மாலத்தீவு மூழ்கும் அபாயம் ஏற்பட்டு அந்த நாட்டு பிரஜைகள் உலகில் எங்கு வேண்டுமானலும் குடியேறும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் 40 வருடம் கழித்து உருகும் என்று எதிர்பார்க்கப்பட்ட பனிப்பாறை ஒன்று இந்த வருட ஆரம்பத்திலேயே உருகி பீதியை கிளப்பியிருந்தது இங்கு மிக முக்கியமாக கவனத்தில் கொள்ளத்தக்கது.

மனித குலத்தையே பூண்டோடு அழிக்கும் திட்டத்துடன் இப்படிப்பட்ட பயங்கரவாத செயல்களை சர்வதேச முதலாளிகள் வரைமுறையற்ற தொழில்சாலை உற்பத்தி, லாப வெறி உள்ளிட்டவைகளின் மூலம் நிறைவேற்றி வருகிறார்கள். இயற்கை வளங்களை நாசப்படுத்தும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் உற்பத்தியே இந்த பயங்கரவாதத்திற்க்கு காரணம். இதே பயங்கரவாதிகள்தான் தமது பயங்கரவாத செயல்களின் மூலம் ஈட்டிய பணத்தை பங்கு சந்தையில் வைத்து சூதாடி ஒட்டு மொத்த உலகையும் பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ள பயங்கரவாத செயலுக்கும் காரணாமனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சர்வதேச பயங்கரவாதிகளை ஒழிக்க கடுமையான சட்டங்களை கொண்டு வரச் சொல்லி எல்லாம் வல்ல அத்வானி அவர்களிடம் கோரிக்கை வைக்கும் யோசனை ஒன்று முன் வைக்கப்பட்டது. பிறகு அவரும் அந்த கும்பலில் ஒருவர் என்பது தெரியவந்தவுடன் அந்த யோசனை கிடப்பில் போடப்பட்டது.

இப்பொழுது இந்த பயங்கரவாத அபாயத்திலிருந்து உலகை காப்பாற்ற என்ன செய்யலாம் என்று மக்கள் மீது அன்பு கொண்டவர்கள் தலையை பிய்த்துக் கொண்டிருப்பதாக சமீபத்தில் வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. அப்போ நீங்க என்ன செய்யப் போறீங்க.

சூரியன்

Climate experts sound grim warning
Waking up to an inconvenient truth