Saturday, April 26, 2008

முகிழ்த்தெழும் பாட்டாளி வர்க்கத்தின் முகாம்.



நேபாள்,
இன்று புதியதொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. கம்யூனிசம் வீழ்ந்து விட்டது, இனி மக்களுக்கு அது பயன்படாது என்ற ஏகாதிபத்திய நச்சுப்பிரச்சாரங்களையெல்லாம் மொத்தமாக சாம்பலாக்கி பேரொளி பாய்ச்சி பிரகாசிக்கிறது நேபாளத்தின் மக்கள் புரட்சி.
கம்யூனிசம் இல்லையேல் இனி வாழ்க்கையே இல்லை என்கிற நிலைக்கு மக்களை ஏகாதிபத்தியத்தின் கொடூரமான சுரண்டல் நாளும் தள்ளிக்கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தான் வரலாறு இது வரை கன்டிராத வகையில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மைய்ய நீரோட்த்ததினூடாகவே ஒரு மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறார்கள் மாவோயிஸ்டுகள்.முதலாளித்துவ ஜனநாயகத்தின் வரம்புகளுக்குள் நின்று கொண்டே முதலாளித்துவத்தையும்,நிலப்பிரபுத்துவத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

கம்யூனிஸ்டுகள் தான் தமது நாயகர்கள் என்பதை தமது வாக்குகள் மூலம் வெளிப்படுத்திய நேபாள மக்களின் விருப்பமானது ஆளும் பிற்போக்கு கும்பலின் நடு மண்டையில் விழுந்த ஜீரனிக்க முடியாத இடியாக இறங்கிக்கொண்டிருக்கிறது. இதன் அதிர்வுகளையும்,ஏகாதிபத்தியத்தின் பதட்டத்தையும், தொடை நடுங்கித்தனத்தையும் சதி வேலைகளையும் நேபாளத்தில் தேர்தல் என்கிற ஒன்று
ஜனநாயகப்பூர்வமாக நடக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாவோயிஸ்டுகளும்,விருப்பத்தை மக்களும் வெளிப்படுத்திய நாட்களிலிருந்து மவோயிஸ்டுகள் வெற்றியை ஈட்டிய இந்த நாள் வரை தொடர்ச்சியாக கானமுடிகிறது. நேபாள தேர்தலில் மாவோயிஸ்டுகள் பெரும்பான்மையை எட்டிக்கொண்டிருந்த போது அமெரிக்காவில் இருந்து சர்வதேச பார்வையாளராக (spy) பங்கேற்ற ஜிம்மி கார்ட்டர் "வரலாற்றில் இது போல எப்பொழுதாவது தான் நடக்கும் என்று" கூறியதும் மாவோயிஸ்டுகள் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமது தலைவர்களாக அங்கீகரிக்கப்பட்ட பிறகு இன்று வரை அமெரிக்கா வைத்திருக்கும் உலக பயங்கரவாதிகளின் பட்டியலில் மாவோயிஸ்டுகளின் பெயர் நீக்கப்படாதிருப்பது வரை இந்த தொடை நடுக்கத்தை காண முடிகிறது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றாலே கூக்குரலிடும் அறிவு ஜீவிகள் முதல் அனைத்து தரப்பு குட்டி முதலாளித்துவ வாதிகளும் முதலாளித்துவ சர்வாதிகாரம் என்று ஒன்று இருப்பதை கானத்துணிவதில்லை.
இதோ அவர்கள் காண்பதற்கும் தெட்டத்தெளிவான உதாரணமாக முதலாளித்துவ ஜனநாயகம் தனது கோவணத்தையும் கூட அவிழ்த்தெறிந்துவிட்டு உரு மாருகிறது.
மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை போட்டுவிட்டார்கள்,வன்முறையை தூண்டவில்லை,எத்தனையோ எதிரிகள் இருந்தும் பழிக்குப்பழி தீர்க்கவில்லை மாறாக முதலாளித்துவ ஜனநாயகப்பாதையில் பயணித்து தான் இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறார்கள். இந்த உண்மையை ஏகாதிபத்தியத்தாலும்,அவனுக்கு குன்டி கழுகி விடும் இந்திய ஆளும் கும்பலாலும் ஜீரனிக்க முடியவில்லை,எனவே தான் அமெரிக்காவின் அடியாளாக நேபாளுக்கு சென்றிருந்த ஜிம்மி கார்ட்டர், "காங்கிரசு கட்சியின் கீழ் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள் அதுவே தொடந்தால் நன்றாக இருக்கும்,கொய்ராலாவிடமே மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட வேண்டும் அதுவே சிறப்பான ஆட்சியாக இருக்கும்" என்று கூறியுள்ளார். இதன் மூலம் முதலாளித்துவ ஜன நாயகத்தின் மறுபக்கமான "முதலாளித்துவ சர்வாதிகாரத்தை" அம்மனமாக அவிழ்த்துக் காட்டியுள்ளார்.அதே போல மொத்த நேபாளமுமே அங்கீகரித்து வெற்றியாளர்களாக அறிவித்த மாவோயிஸ்டுகளை இன்று வரை அமெரிக்கா பயங்கரவாதிகளின் பட்டியலில் வைத்துள்ளது.

இவையும் இதுபோன்ற இன்னும் பல கண்ணுக்கு தெரியாத சதித்திட்டங்களும் நாளை உலகம் முழுவதும் அம்பலமாகும் பொழுது முதலாளித்துவ ஜனநாயகத்தை நம்பியிருந்த மக்களே அதை சவக்குழிக்குள் தள்ளி மூடுவார்கள். அந்த வர்க்க போரின் உக்கிரமான காட்சிகள் தற்போது நேபாளில் துவங்கிவிட்டது. மாவோயிஸ்டுகள் தலைமையில் அரசியல் நிர்ணய சபை அமைப்பதற்காக நேற்று நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவற்றில் சில

1) அமெரிக்காவின் உலக பயங்கரவாதிகளின் பட்டியலில் இருந்து மாவோயிஸ்டுகளின் பெயரை உடனடியாக நீக்க வேண்டும்.
2) மிகக் குறுகிய காலத்திற்குள் தோழர். பிரசந்தா தலைமையில் ஒரு இடைக்கால் கூட்டணி அரசு அமைக்கப்படும்.
3) இந்திய - நேபாள எல்லைக்குள் கேட்பாரின்றி நுழையும் வாகனங்களையும், ஆபாச சீரழிவை ஏற்படுத்தும் இந்தித்திரைப்படங்களும் தடை செய்யப்படும்.


மேலும்
விரிவான தீர்மானங்கள் வாசிக்க http://www.hindu.com/2008/04/25/stories/2008042550060100.htm
மக்கள் வாக்களித்து தமது தலைவர்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள், நேபாள மாவோயிஸ்டுகள் தான் மக்களை வழி நடத்த முற்றிலும் தகுதியுள்ளவர்கள் என்று மக்களே தீர்மானித்த பிறகும் ஏன் இவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை? ஏன் கூக்குரலிடுகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறதா?
ஏனெனில்
இதுதான் வர்க்கப்போர்,
நிலப்பிரபுத்துவமும், தரகுமுதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் ஓர் முகாம்.
இழப்பதற்கு ஏதுமற்ற கூலிப்பட்டாளம் ஓர் முகாம்.
ஆம் இது ஏகாதிபத்தியத்திற்க்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான போர்.

வர்க்கம், வர்க்கப்போராட்டம் ஆகியவற்றை மறுப்பவர்களுக்கும் நேபாளம் ஒரு சாட்சி. அதை முடித்து வைக்கத்தான் நேபாள மாவோயிஸ்டுகள் கையை உயர்த்தியுள்ளார்கள், நாமும் அவர்களோடு கரம் உயர்த்துவோம்.
புரட்சி நீடூழி வாழ்க

Tuesday, April 22, 2008

மாவோயிஸ்டுகளின் வெற்றி


The counting for the votes under the First-Past-The-Post (FPTP) has been completed.
According to the final tally, the Maoists have won 120 out of the total 240 seats under FPTP. It has fallen one short of commanding clear majority under FPTP.
Nepali Congress (NC) is a distant second with 37 seats followed by the Unified Marxist Leninist (UML) with 33 seats.
The Madhesi Janadhikar Forum (MJF) bagged 30 seats while Terai Madhes Loktantrik Party (TMLP) won 9 seats.
Rajendra Mahato-led Sadbhavana Party has pocketed four seats. Two seats each have been won by Nepal Workers and Peasants Party (NWPP), Peoples Front and independent candidates. Rastriya Janamorcha won one seat.
The counting of votes under Proportional Representation (PR) category, too, is nearing completion.

Maoist to make additional efforts to include all in govt
The meeting of the central secretariat of the Maoist has decided to make additional effort to include Nepali Congress, UML and other Madhesi parties in the coalition government under its leadership.
Chairman Prachanda told reporters after the meeting that the central committee meeting called for next week will decide on format of the new government, which he predicted would take another one month to get its shape.
Very few leaders of Nepali Congress, UML and Madhesi Janadhikar Forum are of the opinion that their party should not join the new government.
Prachanda further said parties other than present Seven Party Coalition would be accommodated into the new government.
Stressing that the first sitting of the constituent assembly would declare Nepal a republic nation, Prachanda said his party has sent messages to king through indirect channels to pave way for peaceful transition of Nepal into republic by vacating the palace, accepting the verdict given by the people.
Meanwhile, Prachanda denied reports that he is likely to make a visit to India soon.
Stating that people have big expectation on the Maoist-led government, Prachanda said preparation have begun to unveil special programmes to provide relief to the conflict hit people.

India's opposition MP fears rise of Naxal menace after Maoist victory in Nepal
A member of parliament of India belonging to opposition Bharatiya Janata Party (BJP) has warned the Indian government that Maoists' victory in Nepal polls could lead to the growth of the Naxal menace in the country, causing serious internal security problems, reports PTI.
During a debate in the Indian parliament, Lok Sabha, Monday, Yogi Adityanath, BJP MP from Gorakhpur, spoke of the growing "red danger" in India following the former rebels' win in the Constituent Assembly election and the likely abolition of monarchy in Nepal.
"If Indian government could declare Indian Maoists and Naxalites as terrorists, why Maoists in Nepal are not declared a terrorist outfit?", he wondered, adding that Naxals had spread their network dramatically during the past four years.
From some six to seven states covering 56 districts, naxalites have now extended their sway to half of the country by expanding to 175 districts, he said.
The BJP MP said the Central government, which was favouring Maoists in Nepal, should not forget that they are aiming for "'Maoist Land', which included large parts of India".
Adityanath said that while the Government hailed the outcome of elections in Nepal, it was also a "celebration time" for the Naxalites in the country who have stepped up their operations.
'The home minister (Shivraj Patil) agreed in parliament that the Naxal (Maoist) problem has increased. But when the Maoists won the elections in Nepal, the Indian government welcomed it. If this is supported, then we cannot solve the problem here,' he said.
'When the Maoists started gaining strength in Nepal, Indian Maoists also got emboldened and carried out many terror operations in India,' Adityanath said.

Sunday, April 13, 2008

இமையத்தின் இருள்களில் பரவும் ஒளி


"இந்த போர் எங்களோடு தொடங்கவுமில்லை,எங்கள் வாழ் நாளோடு முடியப்போவதுமில்லை "

-தோழர் பகத்சிங்

நேபாளத்தில் மாவோயிஸ்ட் தோழர்கள் ஒரு மகத்தான சாதனையை, வரலாற்று முக்கியத்துவமுடைய ஒரு சாதனையை நமது கண் முன்னால் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஏகாதிபத்தியத்திற்கும் அதனுடைய கூலிகளுக்குமான சவப்பெட்டியும் அதில் அறைவதற்கான ஆணிகளும் நேபாளத்தில் தான் தயாராகிக்கொண்டிருக்கிறது.
இதன் முதல் கட்டமாக நேபாளத் தேர்தலில் மக்களின் பேராதரவோடு வெற்றி வாகை சூடியுள்ள மாவோயிஸ்ட் கட்சியுடைய இரண்டாம் நிலைத்தலைவர் தோழர் பாபுராம் பட்டாராய் அவர்களின் நேர்கானல்
இன்று (13/04/08) இந்து நாளித்ழில் வெளியாகியுள்ளது. அதன் மொழி பெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது.



கூட்டணி அரசாங்கத்தை அமைப்போம் - பட்டாராய்

நேபாள மாவோயிஸ்டுகளின் இரண்டாம் நிலை தலைவரும் நேபாளத்தின் வருங்கால பிரதமருமாக கருதப்படும் திரு.பாபுராம் பட்டாராய் "அரசியல் நிர்ணயசபை தேர்தலில் தமது கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றாலும் ஒரு கூட்டணி அரசையே அமைக்கவிருப்பதாக கூறியுள்ளார்."

"நடக்கக்கூடிய இந்த மாற்றத்தில் அரசியல் பொதுகருத்தை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் இன்னும் முன்னேறிச் செல்ல வேண்டும்.இதன் முடிவில் கூட்டணி அரசு அமைந்தாலும் வருங்காலத்தில் மாவோயிஸ்டுகளே அதற்கு தலைமை தாங்குவார்கள் என்பதில் தெளிவாக இருக்கிறோம், அதுவே மக்களின் இன்றியமையாத் தேவையாகவும் உள்ளது" என்று இந்து நாளிதழுக்கு கொடுத்த சிறப்பு பேட்டியில் கூறியுள்ளார்

அதிபர் ஆட்சி வடிவத்தை மாவோயிஸ்டுகள் தங்கள் தேர்தல் அறிகையில் வலியுறுத்தியுள்ளனர் இருப்பினும் திரு.பட்டாராய், "தற்போது இடைக்கால அரசியல் அமைப்பில் பங்கேற்றாலும், வரக்கூடிய புதிய அரசியல் அமைப்பின் மாறத்தின் ஊடாக தற்போது நிலவக்கூடிய பிரதமர் ஆட்சிமுறையை முடிவுக்குக் கொண்டுவந்து விடுவோம்" என்று கூறியுள்ளார்.

திரு.பட்டாராய் தேர்தல் முடிவுகள் குறித்து கூறுகையில் " இந்த தேர்தல் முடிவுகள் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை பிரதிபலிப்பதாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார் .
"மக்கள் நேபாளத்தில் ஒரு உண்மையான மாற்றத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் ஆனால் பழைய கட்சிகளோ தற்போது இருக்கக்கூடிய நிலைமையையே நீட்டிக்க விரும்பினர், எனவேதான் மக்கள் இந்த மாற்றத்தை நிகழ்த்த எங்களை தேர்த்தெடுத்துள்ளனர்." மேலும் அவர், " மாவோயிஸ்டுகளால் மட்டும் தான் நீடித்த அமைதியையும் முன்னேற்றத்தையும் கொண்டுவர முடியுமென்று மக்கள் ஏற்றுக்கொண்டதால்தான் அவர்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள்" என்றும் கூறியுள்ளார்.

தமது கட்சியின் வருங்கால அரசியல் நோக்கத்தை விளக்கும் பொழுது அவர் "நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்பதும், பிராந்திய சுயாட்சியுடன் கூடிய ஒரு ஒருங்கிணைந்த ஜனநாயகக் குடியரசை நிறுவுவதே எங்களின் முக்கியமான அரசியல் நோக்கமாகும்."

பொருளாதாரத்தைப் பற்றி கூறும் பொழுது திரு.பட்டாராய் " நாங்கள் ஊழல், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதும், தொழில்களை தேசியமயமாக்குதலுடன் கூடிய விரைவான பொருளாதார வளர்சியை கொண்டுவர பாடுபடுவோம்". "எங்கள் கட்சி ஜனநாயகத்திற்குட்பட்டு இயங்கும் அதேபோல எமது ஆட்சியின் கீழ் எவரும் தனிமனித உரிமையையும், சட்டத்தின் ஆட்சியையும் நிறுவுவதை மறுத்துவிட முடியாது ஆனாலும் எங்கள் கட்சியின் ஆட்சி உண்மையான ஜனநாயகமாக இருக்கும், பெயரளவிலான ஜனநாயகமாக இராது.

அவர் மேலும் வாதிடுகிறார்:
நாடாளுமன்ற ஜனநாயகமென்பது நேபாளத்திற்கு எக்காலத்திலும் பொருந்தாது இங்கு வேறு வகையிலான ஒரு முழுமையான ஜனநாயகம் அவசியமாக உள்ளது. அவர் தமது கட்சியின் வெளியுறவு கொள்கைகள் பற்றி கூறும் பொழுது நாங்கள் அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் கூடிய வெளியுறவுக் கொள்கைகளையே விரும்புகிறோம், குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவுடன்.

நேபாளம்: இமயத்தின் மீது சிவப்பு ...