Tuesday, March 2, 2010

ஆர் எஸ் எஸ் அங்கிளும், காம லீலை நித்தியாவும்!!

சுவாமி நித்தியானந்தா நடிகைகளுடன் காம லீலைகளில் ஈடுபட்டு ஆன்மீகச் சேவை செய்தது வீடியோ ஆதாரங்களாக நேற்று வெளிவந்து சந்தையில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.எப்போது ஆதாரம் வெளி வரும் என்று காத்திருந்தது போல ஆர் எஸ் எஸ் இந்துத்துவ பயங்கரவாதிகள் நித்தியாவின் ஆசிரமத்தை தாக்கி, அவனது படங்களை கிழித்து, அவனை கைது செய்ய வேண்டும் என்றும், ஆசிரமத்தை இழுத்து மூட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இந்து மதத்துக்கு பெருத்த அவமானத்தை அவன் உருவாக்கி விட்டான் என்றும், இந்துக்களிடம் தான் குற்றமற்றவன் என்று நிரூபித்த பின்புதான் அவன் வெளியே நடமாட வேண்டும் என்றும் கூறி குரங்குகள் போல குதிக்கின்றனர்.

சாமியார்கள் கபட வேடாதாரிகள் என்பது காலம் காலமாக அம்பலமாகி வருவதும், இவையெல்லாவற்றையும் மீறி நடைமுறை வாழ்க்கை ஏற்படுத்தும் பல்வேறு மன உளைச்சல்களிலிருந்தும், மன நோய்களிலிருந்தும் விடுபட உதவுவதாக எண்ணிக் கொண்டு மக்கள் இந்த போதை வஸ்து வியாபாரிகளை நோக்கி படை எடுப்பதும் நடந்து வருகின்ற ஒன்றுதான். அந்த வகையில் நித்தியா அம்பலமானது அவனது ரசிக மஹாஜனங்களிடம் அல்லது ஆன்மீக கஸ்டமர்களிடம் ஏற்படுத்த இருக்கும் ஆன்மீக அதிர்ச்சி ஒரு நல்ல விளைவை நோக்கிய இன்னுமொரு சிறிய முன்னேற்றம் என்று நாம் சந்தோசப்படலாம் என்பது ஒரு பக்கம் இருக்க. இவனைப் போல நமது சாமியார் இன்னும் அம்பலமாகவில்லை என்று சத்குரு ஜக்கி போன்றவர்களின் ஆன்மிக கஸ்டமர்கள் நிம்மதியில் இருப்பதும் ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஆனால், அவனை வைத்து ஆர் எஸ் எஸ் இந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்தும் நாடகம் அவர்களின் பார்ப்பனிய பாசிச தத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கதாக உள்ளது. இதற்கு முன்பு இதைவிட கேவலமான முறையில் சங்கராச்சாரி என்ற கஞ்சா காமகோடி பீடையாதிபதி, கொலை, ஆள்கடத்தல், புளூபிலிம், விபச்சாரம், பெண்களை பலாத்காரம் செய்தல், முறைக் கேடான உறவுகள் என்று சகலவிதமான அசிங்கங்களிலும் சிக்கி அம்பலமானான். அன்றைக்கு அவனுக்கு ஆதரவாக வீதியில் இறங்கி கோசமிட்டவர்கள் இதே ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்தான். இதற்காக சென்னை நீதிமன்றத்தில் ம க இ க அமைப்பினரிடம் அடி வாங்கி ஓடியவர்கள்தான் அவர்கள். சங்கராச்சாரி என்ற பார்ப்பனன் காம லீலைகளின் ஈடுபட்டால் அது இந்து மதத்துக்கு அவமானம் இல்லையாம். அவன் குற்றமற்றவன் என்று நீருபிக்க வேண்டிய அவசியமில்லையாம். அவன் மீண்டும் அனைத்துலக குருவாக வலம் வர வேண்டுமாம். அவ்வாறு செய்யாவிடில் அது இந்துக்களின் நம்பிக்கைக்கு விரோதமானதாம், அவமானப்படுத்துவதாகிவிடுமாம். ஆனால் நித்தியாவின் விசயத்தில் தலைகீழ். ஏனேனில் அவன் பார்ப்பான் கிடையாது.இதுதான் இந்துக்களின் நம்பிக்கை, ஆன்மீகம் என்று ஆர் எஸ் எஸ் பெரும்பான்மை மக்களை அவமானப்படுத்துகிறது.

நமக்கு இந்த பேதமெல்லாம் கிடையாது. எவனொருவன் பார்ப்பனியத்துக்கு சேவை செய்கிறானோ எவனொருவன் மக்கள் விரோதியோ அவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நமது அனுகுமுறை.ஆனால், ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளோ, தேவநாதன் என்ற பார்ப்பனன் கோயிலுக்கு வருகின்ற பெண்களை மயக்கி கோயில் கருவறையிலேயே ஜெகஜ்ஜால காம லீலைகள் அரங்கேற்றியது அம்பலமான பொழுது அதனை இந்துத்துவ பயங்கரவாதிகள் கண்டுகொள்ளவே இல்லை. சிதம்பரம் கோயிலில் ஆண்டாண்டு காலமாக விபச்சாரமும், கொலைகளும், திருட்டும் கோயில் தீட்சிதர்களாலேயே அரங்கேறி வந்தது பலமுறை அம்பலமான பொழுதெல்லாம் இந்துத்துவ பயங்கரவாதிகள் அமைதி காத்தார்கள்.ஆனால், தமிழில் பாட உரிமை கோரி போராடிய பொழுது மட்டுமே எதிர்த்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக களம் இறங்கினார்கள்.

ஆக, விபச்சாரமும், பாலியல் வக்கிரங்களும், திருட்டும், கொலையும் பார்ப்பனனுக்கு மட்டுமே உரியது என்ற இந்து மதச் ஆசாரங்களின்படிதான் அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். எனவேதான் சூத்திர சாமியார்கள் இதே வேலைகளைச் செய்தால் மட்டுமே இந்து மதத்துக்கு அவமானம் என்று கதறுகிறார்கள். சூத்திர சாமியார் ஆகட்டும் அல்லது பார்ப்பனச் சாமியார் ஆகட்டும் அல்லது இவர்களுக்கு இடையே பேதம் பார்த்து அரசியல் செய்யும் ஆர் எஸ் எஸ் இந்துத்துவ பயங்கரவாதிகளாக அணி திரண்டுள்ள சூத்திர, பார்ப்பன அடியாட்களாகட்டும் இவர்கள் அனைவருமே ஒழித்துக் கட்டப் பட வேண்டிய கிருமிகள். இவர்களை வீதிகளின் இறங்கி நையப் புடைத்தெடுக்க சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களும் ஒன்று திரள வேண்டியுள்ளது.

சூரியன்

பரகாலஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள்!">பரகாலஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள்!

புத்தகக் கண்காட்சியில் வினவு ! நூல் மூன்று : கடவுள் கைது ! பக்தன் விடுதலை !!">புத்தகக் கண்காட்சியில் வினவு ! நூல் மூன்று : கடவுள் கைது ! பக்தன் விடுதலை !!

சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !">சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !