Monday, March 17, 2008

சிதம்பரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்


தில்லை சிற்றம்பலம் ஏறியது தமிழ் !
வெற்றி விழா...
சிறை சென்ற‌ போராளிகளுக்கு பாராட்டு விழா...





பொதுக்கூட்டம்
நாள்: 29. 3. 2008 சனி மாலை 5 மணி
இடம்: பெரியார் திட‌ல், மேல‌ வீதி,
சித‌ம்ப‌ர‌ம்.




தலைமை:
வ‌ழ‌க்குரைஞர். சி.ராஜு,
மாநில‌ ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்.



வரவேற்புரை:
வ‌ழ‌க்குரைஞ‌ர். திருமார்ப‌ன்
வ‌ழ‌க்குரைஞ‌ர் அணி வி.சி.க‌.


முன்னிலை:
சிவ‌ன‌டியார் ஆறுமுக‌ச்சாமி,
குமுடிமூலை.


திரு. V.V சுவாமி நாதன்,வ‌ழ‌க்குரைஞர்,
முன்னாள் இந்து அற‌நிலைய‌த்துறை அமைச்ச‌ர்,
சித‌ம்ப‌ர‌ம்.



திரு. சந்திரபாண்டியன்
முன்னாள் ந‌க‌ர் ம‌ன்ற‌ த‌லைவ‌ர்,பா.ம‌.க‌,
சித‌ம்ப‌ர‌ம்.



உரையாற்றுவோர்:
வ‌ழ‌க்குரைஞர் துரை. சந்திரசேகரன்,
துணைப்பொதுச்செய‌லாள‌ர் தி.க‌



பேரா இராச‌.குழந்தைவேலனார்,
க‌ட‌லூர் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்.




தோழ‌ர் து.பாலு
மாவ‌ட்ட‌ அமைப்பாள‌ர்
புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் இளைஞ‌ர் முன்ன‌ணி,
க‌ட‌லூர்.


தோழ‌ர் அனந்த குமார்,
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌த் தொழிலாள‌ர் முன்ன‌ணி,
பாண்டிச்சேரி.


தோழ‌ர் அம்பேத்க‌ர்
மாவ‌ட்ட‌ அமைப்பாள‌ர்,
விவ‌சாயிக‌ள் விடுத‌லை முன்ன‌ணி,
விழுப்புர‌ம் மாவ‌ட்ட‌ம்.


வ‌ழ‌க்குரைஞர் வாஞ்சிநாத‌ன்
மாநில துணைச்செயலாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்,
ம‌துரை.



திரு. இரா.காவிய‌ச்செல்வ‌ன்
விடுதைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி.



சிற‌ப்புரை

தோழ‌ர் ம‌ருதைய‌ன்
பொதுச்செய‌லாளர்,
ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்.



திரு. தி.வேல்முருக‌ன்
ச‌ட்ட‌ ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ப‌ன்ருட்டி,
த‌லைவ‌ர்,அர‌சு உறுதி மொழிக்குழு.



திரு.சிந்தனைச்செல்வன்.
விடுதைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி.




பேராசிரிய‌ர் பெரியார்தாச‌ன்.





ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌த்தின் புரட்சிக‌ர‌ க‌லை நிக‌ழ்ச்சி
மாலை 5 ம‌ணிக்கு ந‌டை பெறும்.





ந‌ன்றியுரை:

வ‌ழ‌க்குரைஞர்.சி.செந்தில்
மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்,
சித‌ம்ப‌ர‌ம்.




ப‌ங்கேற்போர்:
ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்
விவ‌சாயிக‌ள் விடுத‌லை முன்ன‌ணி
புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் இளைஞ‌ர் முன்ன‌ணி
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌த்தொழிலாள‌ர் முன்ன‌ணி
க‌ட‌லூர் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
விடுதைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி
பாட்ட‌ளி ம‌க்க‌ள் க‌ட்சி
திராவிட‌ர் க‌ழ‌க‌ம்.




நிக‌ழ்ச்சி ஒருங்கிணைப்பு:
மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்
க‌ட‌லூர் மாவ‌ட்ட‌ம்.

2 comments:

குருத்து said...

தோழர்,

பொதுக்கூட்ட அழைப்பை என் பதிவில் எடுத்து போட்டிருக்கிறேன்.

உங்கள் பிளாக்கையும் என்னுடையதில் இணைத்திருக்கிறேன்.

சாக்ரடீஸ்

ஏகலைவன் said...

வணக்கம் தோழரே!,

முன்டாசுக்கவிஞன் என்று உணர்ச்சிப் பெருக்குடன் நம் முன் உருவகப்படுத்தப்பட்ட பாரதியை, அவனது அந்த முன்டாசுக்குள் மூடிவைக்கப்பட்டிருந்த பார்ப்பனக் குடுமியையும், தேசிய விடுதலை பாடல்கள் என்ற போர்வைக்குள் அவன் மறைத்துவைத்திருந்த‌ ஆரிய விடுதலைப் புராணங்களையும் அனைவருக்கும் திறந்துகாட்டியவர் வே.மதிமாறன். இது நடைபெற்று சுமார் 7 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதற்கு இதுவரை சரியான விமர்சனங்கள் எதுவும் முன்வைக்கப்படாத மந்தமான சூழ்நிலையே இருக்கிறது.

ஆனாலும், இன்னும் பாரதியின் துதிபாடல்கள் நின்றபாடில்லை. அது ஏதோ பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலால் நிகழ்த்தப்படுகிறது தொலைந்து போகட்டும் என்று விட்டுவிடவும் முடியவில்லை. ஏனென்றால் அதை நிகழ்ததிக்கொண்டிருப்பது முற்போக்குக் கூடாரம். இரட்டை வேடமே தனது கொள்கையாக வடித்து வைத்துக்கொண்டு போலிக் கம்யூனிசம் பேசித்திரியும் சி.பி.ஐ/எம் கட்சிகளும் அதன் வெகுஜன அமைப்புகளான த.மு.எ.ச. போன்ற அமைப்புகளும் இதனை முன்னின்று நடத்திக்கொண்டிருக்கின்றன.

மதிமாறனுடைய ''பாரதி'ய ஜனதா பார்ட்டி'' நூலைப்பற்றிய மதிப்பீடுகளைச் செய்யாமலேயே, அந்நூலுக்கான கண்டனக் கூட்டங்களையும் நடத்தி தன்னுடைய பார்ப்பன சேவகத்தை செவ்வனே செய்துமுடித்தன த.மு.எ.ச.வின் பெருந்தலைகள்.

இப்போதும் கூட ஒரு நூல் வெளியீட்டுவிழாவில் த.மு.எ.ச.வின் ஆதவன் தீட்சன்யாவிடம் இதுகுறித்தான ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது. "பாரதி குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?" என்பதுதான் அந்த கேள்வி. கீற்று என்ற இணையதள நிர்வாகி மிணர்வா என்பவர் இந்தக் கேள்வியை சில நூறுபேர் குழுமியிருந்த அந்தச் சபையில் வைத்தார்.

அதற்கு அவர் அளித்த பதிலின் சாரம் இதுதான் "நாங்கள் பாரதிதாசனை விமர்சித்து கட்டுரையொன்றை எமது 'புதுவிசை'யில் வெளியிட்டுவிட்டோம்" என்பது அவருடைய பதில். (இன்னும் நான் முழுமையாக வாசிக்கவில்லை, பிறகு சொல்கிறேன் என்றெல்லாம் நிறைய சப்பைக்கட்டுகளும் அவரது பதிலில் இடம்பிடித்திருந்தன) பாரதியைப்பற்றிக் கேட்டால் பாரதிதாசனைக்காட்டுவதுதான் இவர்களது முற்போக்கா?

மாபெரும் தலித் எழுத்தாளர் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் இந்த முற்போக்கு வேடதாரி, பாரதியை ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா, என்று கூட சொல்லமுடியாத இரட்டைநிலையில் இருந்து கொண்டு சாதியத்திற்கு எதிராக எதைக் கிழித்துவிடமுடியும்? என்பதுதான் நமது கேள்வி.

சரி அவரது 'புதுவிசை'யில் இதுகுறித்து எழுதப்பட்டுள்ளதுதான் என்ன? இந்த விவாதம் மீண்டுமொருமுறை தொடங்கப் பட்டுள்ளது என்னுடைய வலைதளத்தில். தாங்களும் இதில் கலந்து கொண்டு விவாதிக்க அழைக்கிறேன்.

நன்றி!
தோழமையுடன்,
ஏகலைவன்.