Wednesday, February 4, 2009

திமுக-வை RSS கைப்பற்றியது!!

ந்த ப்ளக்ஸ் போர்டை பார்த்தாலே கண்கள் எல்லாம் பரவசமாகின. ஒரு பக்கத்தில் RSS அன்னை சிங்கத்தின் மீது சாய்ந்து நின்று கொண்டு நம்மை பார்க்க, இன்னொரு பக்கத்தில் உடன்பிறப்புகளின் மூத்த அண்ணன் கலைஞர் கருணாநிதியும் அவரது தவப் புதல்வர், இன்றைய ஊராட்சியான (நாளைய தமிழகமாம்) ஸ்டாலின் நம்மை உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். என்னயிது கலப்பு திருமணம் போல இருக்கு என்று பார்த்தால் பெருங்குடியில் இருக்கும் பாரதமாதா இளைஞர் மன்றம் தனது 13வது ஆண்டு துவக்க விழாவுக்கு வைத்த விளம்பர தட்டி இது. இந்துத்துவ இளைஞர் மன்றத்தை உடன்பிறப்புகள் கைப்பற்ற, கலைஞரையோ பாரத மாதாவே (சோனியாவும், பாரத மாதாவும் ஒன்னுதான்) கைப்பற்றியாகிவிட்டது.



கருணாநிதி RSSன் கிராம பூசாரி சங்கத்தை திறந்து வைக்கும் போது அவரது உடன்பிறப்புகள் ஆப்டர் ஆல் ஒரு பாரத மாதா படத்துடன் போஸ் கொடுக்கக் கூடாதா என்ன? என்ன பாவம் அந்த சிங்கம்தான் 'சிங்கிளா' இந்த 'கூட்டத்து'க்கிட்ட மாட்டிக்கிட்டு பேஸ்து அடிச்சிப் போய் நிக்குது. ஈழத்தில் உள்ள தமிழர்களுக்கும் சேர்த்து தலைவராக அறிவிக்கப்பட்டவர் இன்று விபிடனனாக துரோகம் இழைத்து வரும் பொழுது அவரது அல்லக்கைகள் இதனை செய்துள்ளது திமுகவின் எதிர்கால வளர்ச்சியை முன்னறிந்ததொரு நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது. இன்னமும் கருணாநிதியின் துரோகத்தை சமரசம், சமரசம் என்று சாமரம் வீசும் அதிர்ஷ்டம் (கெட்ட) பார்வையுடயைவர்களுக்கு புரிந்தால் சரிதான்.

சூரியன்

5 comments:

சூரியன் said...

//முக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஏதோ ராஜபக்சே கட்சி தீர்மானத்தைப் போல உள்ளது. அது திருப்தி தரவில்லை, ஏமாற்றத்தையே அளித்துள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.//

இந்த ஆளு ஏதோ பெரிய சுத்தம் மாதிரி பேசுறாரு. அத்தன பேரும் பொறுக்கிங்கங்கதான். இதுல என்னடா நீ உத்தமன் அடுத்தமன் தப்புன்னு பிலிமு.

சூரியன் said...

//நம் சுரணையை மீட்டெடுக்கவும் கருணாநிதி & காங்கிரசு கள்ளக்கூட்டுத் துரோகத்தை அம்பலப்படுத்தவும் முத்துக்குமாருக்கு இதை விட்டால் வேறு வழி இல்லையே. முத்துக்குமாரின் ‘கோழைத்தனத்தை‘ விமர்சிக்கும் மகா மகா வீரர்களே! அவன் மரணம் உங்கள் முகத்திலும் என் முகத்திலும் காறி உமிழப்பட்ட எச்சில். ///

http://suguna2896.blogspot.com/2009/02/blog-post.html

சூரியன் said...

மருத்துவமனை மீது கொத்து வெடிகுண்டுகளை வீசி இலங்கை தாக்குதல்: ஐ.நா
புதன்கிழமை, பிப்ரவரி 4, 2009, 15:56 [IST]
கொழும்பு: வன்னி, புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவமனை மீது கொத்து வெடிகுண்டுகளை வீசி இலங்கை வான்படை தாக்குதல் நடத்தியதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவமனையை இலங்கை வான்படை தொடர்ந்து தாக்கி வருகிறது. நேற்றுடன் 3வது முறையாக மருத்துவமனையை அது கடுமையாக தாக்கியுள்ளது.

போரில் காயமடைந்தவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இலங்கைப் படைகள் கொத்து வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது.

இதுகுறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் கார்டன் வீஸ் கூறுகையில், புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது கொத்து குண்டுகளை வீசி இலங்கைப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் மருத்துவமனை பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.

அங்குள்ள நோயாளிகள், மருத்துவமனைப் பணியாளர்கள், எங்களது சேவையாளர்கள், அவர்களது குடும்பத்தினரின் உயிருக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது என்றார்.

ஞாயிற்றுக்கிழமை முதல் புதுக்குடியிருப்பு மருத்துவமனையை தொடர்ந்து தாக்கி வருகிறது இலங்கைப் படை என்பது குறிப்பிடத்தக்கது.

தறுதலை said...

கயவன் கருணானிதி, வப்பாட்டி ஜெயலலிதா, அரசியல் வேசி ராமதாஸ், கோமாளி கோபால்சாமி இவனுங்க அத்தன பேரும் பொறம்போக்கு நாய்ங்கதான். எந்தப் பொறுக்கிகளையும் நம்பவே கூடாது. இவங்களுக்கு தோலுரிக்கிற அதே நேரத்துல சோமாறிகளையும், கொட்டைதாங்கிகளையும் களையெடுக்க வேண்டும்.

ஈழம் நோக்கிப் பயணம் இன்றே ராமேஸ்வரத்திலிருந்து தொடங்க வேண்டும்.

-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'09)

Anonymous said...

//இன்னமும் கருணாநிதியின் துரோகத்தை சமரசம், சமரசம் என்று சாமரம் வீசும் அதிர்ஷ்டம் (கெட்ட) பார்வையுடயைவர்களுக்கு புரிந்தால் சரிதான்.//


கலைஞரய்யா ரொம்ப தெளிவா இன்னிக்கு பேசிட்டாரு. இப்பொ என்ன பிரச்சினைன்னா கலைஞர் மற்றும் இதர துரோகிகளின் நடவடிக்கைகளை சமரசம் சமரசம்ன்னு நம்பிக் கொண்டிருந்தவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான். குறிப்பாக் மதிபாலா போன்றவர்கள்.